கொழும்பு - குருநாகல் வீதியில் விபத்து: மூவர் பலி

கொழும்பு - குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

by Staff Writer 15-03-2019 | 4:09 PM
Colombo (News 1st) கொழும்பு - குருநாகல் வீதியின் பொல்கஹவெல, மெத்தலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 4 மற்றும் 6 வயதான பிள்ளைகளும் 16 வயதான சிறுவனும் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாதம்பை - சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாபம் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச சபை உறுப்பினர் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.