English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Mar, 2019 | 7:08 pm
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து சுமார் 7,000 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2200 பக்தர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவானுக்கான பஸ் போக்குவரத்துகள் இன்று இடம்பெற்றதுடன், அங்கிருந்து படகு மூலம் பக்தர்கள் கச்சத்தீவிற்கு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு இராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகு மூலம் வருகை தந்தனர்.
இந்தியாவின் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள் இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் கச்சத்தீவிற்கு புறப்பட்டனர்.
இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 2450 பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.
26 May, 2022 | 08:13 PM
12 Mar, 2022 | 08:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS