UPDATE: FACEBOOK சேவை வழமைக்குத் திரும்பியது

UPDATE: FACEBOOK சேவை வழமைக்குத் திரும்பியது

by Chandrasekaram Chandravadani 14-03-2019 | 6:30 AM
Colombo (News 1st) பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளத்தின் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. உலகளாவிய ரீதியில் பேஸ்புக் அதன் வரலாற்றில் மிகவும் கடுமையான செயலிழப்புக்கு உள்ளாகியிருந்தது. இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியனவும் செயலிழந்திருந்தன. இந்த இடையூறிற்கான காரணம் இதுவரையில் வௌியிடப்படவில்லை. இந்தநிலையில், பேஸ்புக்கின் செயலிழப்பை இயன்றவரையில் விரைவாக சீர்படுத்துவதற்கான செயறாபாட்டில் ஈடுபட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாகத் தெரிவித்திருந்தது. இதற்கு முன்னர் இதேபோன்று 2008ஆம் ஆண்டு பேஸ்புக்கில் இவ்வாறான தடங்கல் ஏற்பட்டிருந்தது. அதன்போது பேஸ்புக் பாவனையாளர்களாக இருந்த 150 மில்லியன் கணக்கானோருடன் ஒப்பிடுகையில், தற்போது பேஸ்புக் பாவனையாளர்கள் ஒருநாளைக்கு 2.3 பில்லியனானோர் மாதாந்தம் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.