by Staff Writer 13-03-2019 | 10:18 AM
Colombo (News 1st) மாத்தறை - பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் ரயில் குறுக்கு வீதியில், ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரில் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை ஒலித்தபோதிலும் காரை ரயில் பாதையூடாக செலுத்துவதற்கு முற்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காரை செலுத்திய தந்தையே உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த 53 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.