பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

by Staff Writer 13-03-2019 | 4:49 PM
Colombo (News 1st) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினரை கலைப்பதற்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அழகியற்கலை பல்கலைக்கழக முன்றலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் கொழும்பு, வோர்ட் பிளேஸை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் மஹில் பண்டார தெஹிதெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.