தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சிலரின் சொத்தாக மாறியுள்ளது: டிலான் பெரேரா

by Bella Dalima 13-03-2019 | 8:58 PM
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சிலரின் சொத்தாக மாறியுள்ளது: டிலான் பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்டார். இதன்போது,
TNA இன்று SNA ஆக மாறியுள்ளது. அது சம்பந்தனின் தேசிய இராணுவமாகும். அவ்வாறு இல்லாவிடின், சுமந்திரனின் தேசியக் கட்சியாக மாறியுள்ளது. தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமது மக்களுக்காக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமற்போயுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, அந்தக்கட்சி ஓர் இருவரின் சொத்தாக மாறியுள்ளது
என குறிப்பிட்டார்.