ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

by Staff Writer 13-03-2019 | 8:39 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச சேவைகள், நீதிச் சேவை, பொலிஸ், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிப்பதாக ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அண்மைக்காலமாக கூறிவந்ததுடன், அவர்கள் இன்று சபையில் வாக்கெடுப்பினைக் கோரினர். எனினும், சபை முதல்வரும் பிரதமரும் வாக்கெடுப்பு தேவையில்லை என அறிவித்தனர். இதற்கமைய, ஆட்சேபனை மாத்திரம் பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ஏனைய செய்திகள்