அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது: மூடிஸ் நிறுவனம்

by Staff Writer 12-03-2019 | 8:01 PM
Colombo (News 1st) இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது என சர்வதேச கடன் தரவரிசை நிறுவனமான மூடிஸ் நிறுவனம் (Moody's) சுட்டிக்காட்டியுள்ளது. மூடிஸ் எண்ணக்கருவிற்கு அமைய, 2020 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை, தேசிய உற்பத்தியில் 3.5 வீதமாகும். 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 4.8 வீதம் என கணக்கிடப்பட்டிருந்த போதிலும், அது 5.3 வீதமாக உயர்வடைந்திருந்தது. இந்த வருடமும் அவ்வாறானதொரு நிலைமையை எதிர்நோக்க முடியும் என மூடிஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Fitch எண்ணக்கருவிற்கு அமைய, அந்த இலக்கை எட்டுவது மிகவும் சவால் மிக்கதாகக் காணப்படுகின்றது.