Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து,
தற்போதுள்ள அரசாங்கத்தின் இறுதி வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத வரவுசெலவுத் திட்டமாகவே இது அமைந்துள்ளது. இதனால் இதற்கு எதிராக வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்
என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.