மாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது

மாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது

by Staff Writer 12-03-2019 | 3:54 PM
Colombo (News 1st) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 8,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்தது. மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காகவே, பாடசாலை அதிபர் மாணவரின் பெற்றோரிடம் இலஞ்சம் கோரியதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார். சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்