by Fazlullah Mubarak 11-03-2019 | 2:49 PM
களுத்துறை - அளுத்கம, தர்காநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 24 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (10) நண்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரள கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்கேதநபர்கள், களுத்துறை தெற்கு மற்றும் தர்கா நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் ஐவரும் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.