4 வருடத்தில் 1500 பில்லியன் மேலதிக கடன் சேர்ப்பு

4 வருடங்களில் 1500 பில்லியன் கடன் மேலதிகமாக சேர்ப்பு - தகவல் அம்பலம்

by Fazlullah Mubarak 11-03-2019 | 2:38 PM

கடந்த 4 வருடங்களில் 1,500 பில்லியன் கடன் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக சக்திகளை இல்லாதொழித்து நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கண்டியில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். கடனை செலுத்துவதில் சிக்கல் காணப்படுவதாக நமது நாட்டின் பிரதமர் கூறுகின்றார். முன்னரை விட நமது நாடு தற்போது அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.