விலைச் சூத்திரத்திற்கான குழு இன்று கூடுகின்றது

விலைச் சூத்திரத்திற்கான குழு இன்று கூடுகின்றது

by Fazlullah Mubarak 11-03-2019 | 2:46 PM

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கான குழு இன்று (11) மாலை கூடவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்தம் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த குழு கூடவுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார். கலந்துரையாடலின் படி, எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் இன்றிரவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.