by Staff Writer 11-03-2019 | 3:58 PM
Colombo (News 1st) மொறட்டுவை - ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபா என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெருந்தொகையான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
500 கோடி பெறுமதியான வைரத்தைத் திருடியதாகக் கூறப்படும் கெலும் இந்திக்க என்ற சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ஹெரோயின் தொடர்பில் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபர் இன்று ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீட்டில் நீண்டகாலம் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று சுற்றிவளைக்கப்பட்ட வீடானது, பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷ் தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்திய வீடு என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.