முன்னாள் கடற்படைத்தளபதி சீ.ஐ.டியில் ஆஜர்

முன்னாள் கடற்படைத்தளபதி சீ.ஐ.டியில் ஆஜர்

by Fazlullah Mubarak 11-03-2019 | 2:43 PM

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகியுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வௌ்ளை வேனொன்றில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியின் அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தினால் கடந்த 7 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, இன்று காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி, சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குமாறு முன்னாள் கடற்படை தளபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்பிரகாரம் முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.