பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

by Staff Writer 11-03-2019 | 10:32 PM
Colombo (News 1st) பொரளை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த சரச்சந்திரவின் இறுதிக்கிரியைகள் இன்று (11) மாலை பொரளையில் இடம்பெற்றன. கடந்த 24ஆம் திகதி பம்மபலப்பிட்டிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த சரச்சந்திரவின் பூதவுடல் பொரளை மயானத்திற்கு வாகன ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட பல அரசியல்வாதிகள் பொலிஸ் அதிகாரி ஆனந்த சரச்சந்திரவின் பூதவுடலுக்கு பொரளை மயானத்தில் தமது இறுதி மரியாதையை செலுத்தினர்.