நவகமுவயில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலம்

நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

by Chandrasekaram Chandravadani 11-03-2019 | 2:36 PM
Colombo (News 1st) நவகமுவ - கொடெல்லவத்த பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 37 வயதான சமில பிரசாத் கருணாரத்ன எனவும் இவர் பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சடலத்தில் அருகிலிருந்து டி - 56 ரக துப்பாக்கியின் ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.