தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குசல்?

தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் குசல் ஜனித் பெரேரா?

by Staff Writer 11-03-2019 | 7:56 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதை காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குசல் ஜனித் பெரேராவின் வெற்றிடத்துக்கு பதிலாக எந்த வீரர் இலங்கை குழாத்தில் இடம்பெறுவார் என அறிவிக்கப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை மறுதினம் போர்ட் எலிசெபெத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இலங்கை அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்குமான தென்னாபிரிக்க குழாத்தில் சகலதுறை வீரரான ஜியோன் போல் டுமினி ஹாசீம் அம்லா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜியோன் போல் டுமினி கடந்த அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தென்னாபிரிக்க தேசிய குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். இதனிடையே, இங்கிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து குழாம் இன்று காலை நாட்டை வந்தடைந்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.