சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

by Staff Writer 11-03-2019 | 2:57 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்னர். இதனைத்தவிர, ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.