எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்பு

எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்பு

by Staff Writer 11-03-2019 | 7:18 PM
Colombo (News 1st) விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி விசாரணையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது. 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் ஈ.ரீ 302 பொயிங் 737 மெக்ஸ் விமானம் பிஷப்ட்டு நகரில் இருந்து 40 மைல் தொலைவில் பிஷப்ட்டு மற்றும் டப்ரே சைட் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் வீழ்ந்து நொருங்கியதாக, விமான சேவை அறிவித்தது. விமானத்தில் பயணித்த 33 நாடுகளைச் சேர்ந்த 149 பேரும் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து அமெரிக்க போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் சவாலுக்குட்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் குறித்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.