திரப்பனை பிரரேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

திரப்பனை பிரரேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

by Staff Writer 10-03-2019 | 7:38 PM
Colombo (News 1st) திரப்பனை பிரதேச சபை உறுப்பினரான ரோஹன விஜேதிலக மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ரோஹன விஜேதிலக என்பவரே காயமடைந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து, சிகிச்சைக்காக அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.