நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகிறது

வறட்சியான வானிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

by Staff Writer 09-03-2019 | 4:36 PM
Colombo (News 1st) வறட்சியான வானிலையால் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 40.7 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், மின் உற்பத்தி நிலையங்களினூடாக 20 வீதமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், நிலவும் வறட்சியுடனான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலுள்ள நீர் வௌியேற்றப்பட்டமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சுலக்ஷன ஜயவர்தனவிடம் வினவியது. அணைக்கட்டினை பரிசோதனை செய்வதற்காக மார்ச் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நீர் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன், நீர்த்தேக்கத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கான புதிய வலைகளை பொருத்துவதற்கும் குறித்த காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். வறட்சியுடனான வானிலை நிலவும் போதே நீர்த்தேக்கங்களில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.

ஏனைய செய்திகள்