by Staff Writer 09-03-2019 | 7:35 PM
Colombo (News 1st) வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சில பிரேரணைகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கும் பொருட்டு, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.
ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா-வின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சில பிரேரணைகளை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநர் இல்லாமையால், மக்கள் தொடர்பாடல் மற்றும் பிரத்தியேக செயலாளரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.