வடக்கின் பெருஞ்சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

by Staff Writer 09-03-2019 | 8:10 PM
Colombo (News 1st) யாழ். மத்திய மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்.ஜோன்ஸ் அணி 181 ஓட்டங்களையும் யாழ். மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களையும் பெற்றன. 14 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் அணி மூன்றாம் நாளான இன்று 9 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது. தனுஜன் கிறிஸ்டி பிரசன்னா 66 ஓட்டங்களையும், நாகேந்திரராஜா சௌமியன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஷ்காந்த் 4 விக்கெட்களையும், செல்வராசா மதுஷன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெற்றி இலக்கான 232 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்குவர போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.