by Staff Writer 09-03-2019 | 4:09 PM
Colombo (News 1st) மாவனெல்ல - தனாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 37 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்ல வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.