சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரானார் D.G.N. ஜயவர்தன

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக D.G.N. ஜயவர்தன பதவி உயர்வு

by Staff Writer 08-03-2019 | 3:20 PM
Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர் D.G.N. ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் D.G.N. ஜயவர்தன புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.