கொள்ளுப்பிட்டி கடைத்தொகுதியில் வெடிப்புச் சம்பவம்

கொள்ளுப்பிட்டி கடைத்தொகுதியில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் காயம், 11 கடைகளுக்கு சேதம்

by Staff Writer 08-03-2019 | 3:11 PM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி முச்சந்தியில் உள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 11 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் 3 கடைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . இச்சம்பவத்தில் சீன தம்பதிகளும் மேலும் மூவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிவாயுக்கசிவினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.