கறுவாவின் தரத்தை உயர்த்த ரூ.75 மில்லியன் ஒதுக்கீடு

கறுவா உற்பத்தி தரத்தை உயர்த்த 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

by Staff Writer 08-03-2019 | 4:21 PM
Colombo (News 1st) கறுவா ஏற்றுமதியாளர்களுக்கான தடைகளைத் தளர்த்தி, உலக சந்தையில் இலங்கையின் கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதற்கென 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கறுவா ஏற்றுமதியும் அதிகரிக்கப்படவுள்ளதோடு, இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.