by Staff Writer 08-03-2019 | 3:48 PM
Colombo (News 1st) இன்று முதல் ரயில்களில் பெண்களுக்கான பிரத்தியேக ரயில் பெட்டிகளை ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க ஆகியோரால் இந்த சேவை வெயாங்கொட மற்றும் குருநாகலை ரயில் நிலையங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
முதற்கட்டமாக 7 அலுவலக ரயில்களில் பெண்களுக்கான ரயில் பயணப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
சாகரிக்கா, சமுத்திராதேவி ஆகிய ரயில்களிலும் மஹவ, பொல்கஹவெல, ரம்புக்கனை, பங்கதெனிய மற்றும் மீரிகட ஆகிய ரயில் நிலையங்கள் வரை செல்லும் அலுவலக ரயில்களிலும் பெண்களுக்கான பயணப்பெட்டிகள் அமைக்கப்படும் என டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.