1000 ரூபா சம்பளம் வழங்க முடியாவிடின் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்: லக்ஷ்மன் கிரியெல்ல

by Bella Dalima 07-03-2019 | 8:06 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாவிடின், தொழிற்சங்கங்கள் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். தோட்டங்களை வைத்துக்கொண்டு தொழிற்சங்கங்கள் அதிக இலாபம் பெறுவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இப்பிரச்சினை அரசாங்கத்தினுடையது அல்லவென்றாலும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்விடயத்தில் தலையிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் காணப்படும் இப்பிரச்சினையில் மங்கள சமரவீர தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் எனவும் சபை முதல்வர் கேட்டுக்கொண்டார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.