வௌிநாடு செல்ல முயன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 30 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

by Staff Writer 07-03-2019 | 8:19 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 30 பேரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ட்ரோலர் படகொன்றில் பயணித்தபோது இன்று அதிகாலை தென் கடற்பிராந்தியத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.