முறைப்பாடுகளை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

முறைப்பாடுகளை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

by Staff Writer 07-03-2019 | 6:55 AM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவிருந்தன. குறித்த ஆணைக்குழுவிற்கு இதுவரை 450க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆணைக்குழுவிற்கு கிடைத்த 270 முறைபாடுகளில் 15 முறைப்பாடுகள், ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக, விசேட பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஏனைய செய்திகள்