ஆவா குழுவுடன் தொடர்புடையவர் யாழ்ப்பாணத்தில் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் யாழ்ப்பாணத்தில் கைது

by Staff Writer 07-03-2019 | 5:51 PM
Colombo (News 1st) ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார். சாவகச்சேரி - தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது இன்று அதிகாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள், 2 முகமூடிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்கள் தொடர்பான வழங்குகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, யாழ். குடாநாட்டின் சில வீதிகளில் 'ஆவாவின் இராச்சியம்' என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஏனைய செய்திகள்