மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் பலி; 35 பேர் காயம்

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் பலி; 35 பேர் காயம்

by Staff Writer 06-03-2019 | 7:58 AM
Colombo (News 1st) மாவனெல்லை - பஹல கடுகன்னாவ இபெரனி அம்பலம பகுதியில் பஸ் ஒன்று மின்கம்பமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பஸ்ஸின் நடத்துனரே விபத்தில் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கண்டி மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் அடங்குகின்றார். அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை​யை சேர்ந்தோர் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த பஸ் நேற்று இரவு 9.15 மணியளவில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் கலாசாலையின் 54 மாணவர்கள் பஸ்ஸில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.