by Staff Writer 06-03-2019 | 8:06 PM
Colombo (News 1st) மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த அறிக்கை பகிரங்க ஆவணம் என்பதால், விரும்பியவர்கள் விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மன்னார் மனிதப் புதைகுழியில் இன்று 154 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.