மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

by Staff Writer 06-03-2019 | 9:06 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க , விஜித்த ஹேரத் மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.