அர்ஜூன மகேந்திரனின் மேன்முறையீடு நிராகரிப்பு

இன்டர்போலுக்கு எதிரான அர்ஜூன மகேந்திரனின் மேன்முறையீடு நிராகரிப்பு

by Bella Dalima 06-03-2019 | 6:15 PM
Colombo (News 1st) தலைமறைவாகியுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்ய இன்டர்போல் மீண்டும் சிவப்பு அறிக்கை வௌியிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னதாக அர்ஜூன மகேந்திரன் இன்டர்போலின் சிவப்பு அறிக்கைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்ததாகவும் இந்த மேன்முறையீட்டை விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில், அர்ஜூன மகேந்திரனின் மேன்முறையீடு நீதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன மகேந்திரனை கைது செய்ய சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரன் இலங்கையினால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.