கொள்ளையிடப்பட்ட வைரம் கண்டுபிடிப்பு

பன்னிப்பிட்டியில் கொள்ளையிடப்பட்ட வைரம் கண்டுபிடிப்பு

by Staff Writer 05-03-2019 | 9:27 AM
Colombo (News 1st) பன்னிப்பிட்டி பகுதியில் அண்மையில் கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 500 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், பாணந்துறை - வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபரின் பிடிகல பகுதியிலுள்ள வீட்டை சோதனையிட்டபோது, 150 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.