உதயநகரில் நபரொருவர் வெட்டிக் கொலை

கிளிநொச்சி - உதயநகரில் நபரொருவர் வெட்டிக் கொலை

by Staff Writer 05-03-2019 | 1:54 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கூட்டுறவு சேவை காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா - வேப்பங்குளத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய உறவினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொலைச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.