கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை

கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவன முகாமையாளர் வெட்டிக் கொலை

by Staff Writer 05-03-2019 | 7:08 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி கூட்டுறவு சேவை காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியா - வேப்பங்குளத்தைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய உறவினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.