அநுராதபுரத்தில் 560,000 மெட்ரிக் தொன் நெல் அறுவடை

அநுராதபுரத்தில் 560,000 மெட்ரிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்ப்பு

by Staff Writer 05-03-2019 | 5:45 PM
Colombo (News 1st) இவ்வாண்டிற்கான பெரும்போகத்தில் அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து வெற்றிகரமான அறுவடையை எதிர்பார்ப்பதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் 1,15,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், 5,60,000 மெட்ரிக் தொன் நெல் அறுவடையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெல் அறுவடை தற்சமயம் ஆரம்பித்திருப்பதாகவும் நெல் கொள்வனவிற்கென 27 மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் குறிப்பிட்டார்.