by Staff Writer 04-03-2019 | 4:47 PM
Colombo (News 1st) தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தநிலையில், இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சந்தரப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.