திருப்பதி விரைந்த பிரதமர் ரணில்

திருப்பதி விரைந்த பிரதமர் ரணில்

by Fazlullah Mubarak 03-03-2019 | 8:19 PM

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை, திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர பெருமான் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று அதிகாலை ஆலயத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரை தேவஸ்தான அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். வெங்கடேச பெருமானை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க துலாபாரம் எனப்படும் சடங்கை நிறைவேற்றியதாக இந்திய தகவல்கள் தெரிவித்தன. இதன்போது தமது எடைக்கு நிகரான அளவு தானத்தை பிரதமர் ஆலயத்திற்கு வழங்கியதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆலயத்தில் உள்ள ரங்கமண்டபத்தில் மூத்த அர்ச்சகர்கள், வேதாகம மந்திரங்கள் முழங்க, ரணில் விக்கிரம சிங்கவுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்கினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதிக்கு விஜயம் செய்த நான்காவது சந்தர்ப்பம் இதுவென த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.