நபரொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டார்

கதிர்காம ஆலயத்திற்குள் நபரொருவர் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டார்

by Staff Writer 03-03-2019 | 1:34 PM
Colombo (News 1st) கதிர்காமம் முருகன் ஆலயத்திற்குள் இன்று காலை நபர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து, தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் ​ஆலயத்திற்கு அருகிலுள்ள விஹாரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்பின்னர், தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தனர்.