by Staff Writer 03-03-2019 | 1:34 PM
Colombo (News 1st) கதிர்காமம் முருகன் ஆலயத்திற்குள் இன்று காலை நபர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் ஆலயத்திற்கு அருகிலுள்ள விஹாரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்பின்னர், தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தனர்.