கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு

அமெரிக்கா - தென் கொரியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு

by Staff Writer 03-03-2019 | 8:38 AM
Colombo (News 1st) அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன. இதேவேளை, சிறியளவிலான இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், பாரியளவிலான பயிற்சிகளை நிறுத்துவதற்கு நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்துவது தொடர்பில் அமெரிக்க மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு நிரந்தரமானதா என்பது தொடர்பில் தௌிவுபடுத்தப்படவில்லை.