குழியில் வீழ்ந்து தொழிலாளர்கள் இருவர் பலி

காங்க்ரீட் தூண்களுக்காக வெட்டப்பட்டிருந்த நீர் நிறைந்த குழியில் வீழ்ந்து தொழிலாளர்கள் இருவர் பலி

by Staff Writer 02-03-2019 | 4:26 PM
Colombo (News 1st) வெலிகம, தெனிபிட்டிய பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் காங்க்ரீட் தூண்களுக்காக வெட்டப்பட்டிருந்த நீர் நிறைந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 32 மற்றும் 24 வயதான குறித்த தொழிலாளர்களின் சடலங்கள் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் தெனிப்பிட்டிய மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.