by Staff Writer 02-03-2019 | 4:52 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளரான மொஹமட் மொஹுதீன் ரஹ்மான் ரஹீம் கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2080 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் வாளொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.