by Bella Dalima 01-03-2019 | 5:17 PM
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய விமானி அபிநந்தன் தற்போது வாகா எல்லையை அடைந்துள்ளார்.
சற்றுநேரத்தில் அபிநந்தன் இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று முன்தினம் (27) வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இந்தியாவின் விமானத்தை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதில் இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தானிடம் இந்திய மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் , இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சமாதானப் பேச்சுவார்த்தையின் முதற்படியாக விடுவிக்கப்படுவார் என நேற்று (28) அறிவித்தார்.