இம்ரான் கானின் செயற்பாடு தொடர்பில் வே. இராதாகிருஷ்ணன் கருத்து

by Bella Dalima 01-03-2019 | 8:04 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செயற்பட்டதைப் போன்ற நிலைமை எம்மிடம் இருந்திருந்தால் இனப்பிரச்சினைக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். விட்டுக்கொடுப்பையும் மனிதத்தையும் இம்ரான் காணிடம் கற்றுக்கொள்ள முடியும் எனவும் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியா - லபுக்கலை தமிழ் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர் வே. இராதகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.