by Staff Writer 01-03-2019 | 4:48 PM
Colombo (News 1st) இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கரையோர காவல் பிரிவினரால் நேற்று (28) பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.